மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் கோர விபத்து- நால்வர் பலி!

0
300

கிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார ஊர்தியுடன் கொழும்பில் இருந்து யாழ்.நோக்கிச் சென்ற கயேஸ் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கியவர்கள் யாழ். நெல்லியடியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here