முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தொற்றுக்காய்ச்சலுக்கு 11 பேர்பலி!

0
224

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பர­வி­வ­ரும் ஒரு­வ­கைக் காய்ச்­சல் கார­ண­மாக நேற்று (05) இன்னும் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் . இன்­பு­ளு­வென்ஸா பி வகை வைர­ஸால் அவர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார் என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்ளனர் . இந்தவகை க் காய்ச்­ச­லால் கடந்த இரண்டு மாதங்­க­ளில் முல்லைத்தீவில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 11 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
இந்­தக் தொற்­றுக் காய்ச்­சல் கட்­டுப்­பாட்­டுக்­குள் இருக்­கி­றது என்­றும் மக்­கள் அச்­ச­ம­டை­யத் தேவை­யில்லை என்­றும் மருத்­துவ நிபு­ணர்­கள் அறி­வித்­தி­ருக்­கும் நிலை­யி­ல் இந்த இறப்பு நிகழ்ந்­தி­ருகிறது .
குமு­ழ­மு­னை­யைச் சேர்ந்த எம்.பாக்­கி­யம் (வயது –74) என்­ப­வரே காய்ச்­ச­லால் நேற்று உயி­ரி­ழந்­த­வர். இவர் கடந்த மூன்று வாரங்­க­ளாக முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­துவமனை­யில் சிகிச்சை பெற்று வந்­தார். எனி­னும் பயன் இன்றி இறந்­து­விட்­டார்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தொற்று காய்ச்­சல் கார­ண­மாக கடந்த நவம்­பர் மாதம் மட்­டும் 9 பேர் உயி­ரி­ழந்­த­னர்.
கடந்த  மாதம் மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரப்­பட்ட குடும்­பப் பெண் ஒரு­வர் அனுமதிக்கப் பட்டபோதே இன்­பு­ளு­வன்சா ஏ வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­த­து தெரிய வந்தது ..
முள்­ளி­ய­வளை,தண்­ணீ­ரூற்று பகு­தி­யி­னைச் சேர்ந்­த­வர்­க­ளில் அதிக எண்­ணிக்­கை­யா­ன­வர்­கள் இந்த வைரஸ் தொற்­றுக்கு உள்­ளாகி மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றுச் சென்­றுள்­ளார்­கள் என்று மருத்­து­வ­ம­னைத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here