ஏமன் நாட்டில் இருந்து ஹவுத்திகள் வீசிய ஏவுகணையை, இடைமறித்து தாக்கி அழித்த சவுதி!

0
147

ஏமன் நாட்டில் இருந்து ஹவுத்திகள் இன்று வீசிய ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.

ஏமன் நாட்டில் இருந்து ஹவுத்திகள் இன்று வீசிய ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த படையினருக்கு ஈரான் ஆயுதங்களை அளித்து ஊக்கமும் ஆதரவும் தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனாபகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தியினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஹவுத்தியினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில் அவ்வப்போது சவுதி அரேபியா மீது ஏமன் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், ஏமன் எல்லையோரம் உள்ள சவுதி அரேபியா நாட்டின் பகுதிமீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி அரசின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here