மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18  ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
238

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18  ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.01.2018) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் யாழ் கந்தர்மடத்திலுள்ள  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் யாழ் மாநகர துணை முதல்வர் வேட்பாளர் ஆ.தீபன்திலீசன் தலைமையில் நடைபெற்றது.

நினைவேந்தலில் அகவணக்கத்தையடுத்து  மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின்  திருவுருவப் படத்துக்கு அவரது புதல்வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்தார். அதனையடுத்து சுடரஞ்சலி மற்றும் மலரஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here