13 வருடங்களில் யாழ் மேல் நீதிமன்றில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை!

0
216

யாழ் மேல் நீதிமன்றில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மேல் நீதிமன்ற புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகுட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை நீதிபதி கே.பி.எஸ்.வரதராஜா, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ்.தியாகேந்திரன், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை நீதிபதி பி.ஸ்வர்ணராஜா, 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா, 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ். பரமராஜா, 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜெ.விஸ்வானந்தன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை நீதிபதி அ.பிறேம்சங்கர், 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 மே மாதம் வரை நீதிபதி திருமதி கே. சிவபாதசுந்தரம்இ ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றியுள்ளதுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இன்று வரை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மா.இளஞ்செழியன் கடமையாற்றி வருகிறார்.
மேற்குறிப்பட்ட நீதிபதிகளின் சேவைக் காலப்பகுதியிலேயே மேற்குறித்த 41 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 2005, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் தலா ஒருவருக்கும், 2012 ஆம் ஆண்டு 2 பேருக்கும் 2013 ஆம் ஆண்டு ஒருவருக்கும் 2014 ஆம் ஆண்டு 4 பேருக்கும்  2015 ஆம் ஆண்டு 8 பேருக்கும் 2016 ஆம் ஆண்டு 11 பேருக்கும் 2017 ஆம் ஆண்டு 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபார்கள் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று பின்னர் மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here