யாழில் இடம்பெற்ற இரு விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு !

0
221

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியும் தனியார் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது. விபத்தில் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த 5 வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழில் இருசக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். துண்டிச் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ். – ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஏ.ராவின் (வயது 24) மற்றும் கே.சுதர்சன் (வயது 33) ஆகிய இருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மணியம்தோட்டம் வீதி வழியாக சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here