நடுக்கடலில் மாரடைப்பு: அல்லைப்பிட்டி மீனவர் மரணம்!

0
324

மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் மாரடைப்பு ஏற்ப ட்டதில் நடுக்கடலிலேயே
பரிதாபமாக உயி ரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வொனி ப்பாஸ் ஸ்ரான்லி லாஸ் (வயது 64) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.
குறித்த மீனவர் தனது மைத்துநருன் நேற்று அதிகாலை மீன்பிடிப்பத ற்காக மண்கும் பான் கடற்கரைக்கு வள்ளத்தில் சென்றுள்ளார்.

அங்கிருந்து ஒரு கடல் மைல் தூரம் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, நெஞ்சு வலிப்பதாக கூறி வள்ளத்திலேயே மயக்கமடைந்துள்ளார். உடனடியாக கரைக்கு கொண்டு வந்த அவருடைய மைத்துனன் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்திருந்தார். ஆனால் அவரை பரிசோதித்த வைத்தியர் குறித்த நபர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here