உத்தர்காண்டில் நில அதிர்வு – டில்லியிலும் உணரப்பட்டுள்ளது!

0
397

இந்திய உத்தர்காண்ட் பிரதேசத்தில் 5.5 ரிச்டர் அளவு கோலில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
தலைநகர் புதுடில்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு டெஹ்ராடூனில் இருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here