உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

0
388

தமிழ்மக்களையும், தமிழீழத் தாயகத்தையும் பாதுகாத்து அனைத்துலகச் சட்டங்களிற்கு அமைவாகவும், தமிழ்மக்களின் முடிவுகளிற்கு அமைவாகவும் தமிழ்மக்களிற்கான நடைமுறை அரசை அமைத்த எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக சித்தரிக்க முனைவதை தவிர்க்குமாறும்…
தமிழ்மக்களின் சுய உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் சுவிசில் பணிசெய்த எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மனித நேயமற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறு வேண்டியும்…
” உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018
கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!!!
சுவிசில் உள்ள கல்வி நிறுவனங்கள், இசை/நடன பள்ளிகள், ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் தமிழர் நிறுவனங்களோடு; அனைத்து தமிழ் பேசும் மக்களும் எம்மினத்தின் வாழ்விற்கும், இருப்புக்குமான இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து பேராதரவு நல்கி, தவறாது கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.​​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here