வல்வெட்டித்துறையில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி!

0
242


money-laundering
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்தமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தெரிவித்துள்ளார்.    வல்வெட்டித்துறை பொலிஸ் பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 24 இலட்சம் ரூபாவினை ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார்

  எனினும் நீண்ட நாட்களாக வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றித்திருந்ததுடன் பணத்தையும் மோசடி செய்துள்ளார்.   உண்மையறிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதில் பருத்தித்துறையைச் சேர்ந்த பெண்ணொருவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்தார்.   குறித்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். 

இதனையடுத்து சம்பவம் குறித்து நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சந்தேக நபர் கைது செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here