பேருந்து முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட விபத்து; 06 பேரை பலிகொண்டது !

0
318

இன்று (06) அதிகாலை கொழும்பிலிருந்து புத்தளம் மார்க்கம் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து , 10ஆம் கட்டைக்கும் மதுரங்குளிக்கும் இடையில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இச் சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களுள் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவர்கள், முதியவர்கள் என 45 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் முந்தல் மாவட்ட வைத்தியசாலை மற்றும் புத்தளம் தள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here