இரணைமடு முகாமிலிருந்து வெளியேறியது சிறீலங்கா இராணுவம் !

0
189

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அருகில் ஆக்கிரமித்து இருந்த சிறீலங்கா இராணுவம், இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்தப் பகுதியில், நீர்ப்பாசனச் திணைக்களத்தின் விடுதிகளை ஆக்கிரமித்து அங்கு நிலைகொண்டிருந்தனர்.
இரணைமடுக் குளம் அமைந்துள்ள பகுதிக்குச் சுற்றுலாவாக வருகைதரும் பிரயாணிகளுக்கு, சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து அப்பகுதி மக்களின் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வந்தது.
சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து இருந்த பகுதி நீர்ப்பாசன திணைக்களத்துக்கு அத்தியாவசியமாகக்காணப்பட்டது. இதுகுறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஆலோசனைகளின் பிரகாரம், இன்றையதினம் அந்த இடத்திலிருந்து சிறீலங்கா இராணுவத்தினர் வெளியேறினர் எனத் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here