இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் திகதி சார்லஸ் என்பவரின் படகில் முருகன், பாண்டி, ஜார்ஜ், ரோமியோ, தரம்ஜீஸ் ஆகிய ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்களை நெடுந்தீவுக் கடற்பகுதியில் வைத்து சிறீலங்கா கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் இன்று (25) இரண்டாவது முறையாக தலைமன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்ஸ் ராஜா கிரேசின், மீனவர்களை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் ஐந்து மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.