கொலைக்குற்றத்திற்கு கைதாகிறார் மின்னல் ரங்கா ?

0
252

வவுனியாவில் வாகனமொன்றை ஓட்டிச்சென்று காவல்துறையினர் ஒருவரின் மரணத்திற்கு காரணமான மின்னல் சிறிரங்கா தற்போது வசமாக மாட்டியுள்ள நிலையில் அவர் மிகவிரைவில் கைது செய்யப்படுவாரென சிறீலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மின்னல் சிறிரங்கா வாகனம் ஓட்டிச்சென்ற போது, அவருக்கு அருகில் இருந்த காவல்துறையினர் கொல்லப்பட்டார்.
அப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஸவும், வவுனியா காவல்துறையினரும் இதனை மூடிமறைத்து, குறித்த காவல்துறையினர் வாகனத்தை ஓட்டியே விபத்தை ஏற்படுத்தி மரணமடைந்ததாக கூறிய மின்னல் ரங்கா அதிலிருந்து தப்பித்துக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஆட்சிக்குவந்த அரசாங்கத்திற்கும், காவல்துறை ஆணைக்குழுவுக்கும் ரங்கா ஓட்டிச் செல்லும் போது கொல்லப்பட்ட காவல்துறையினரின் மனைவி முறைப்பாடு செய்ததற்கு அமைய இந்த வழக்கு மீள் எடுக்கப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களமும் ரங்காவே வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, காவல்துறையினரின் மரணத்திற்கு காரணமென உறுதி செய்துள்ளார். ரங்கா விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here