காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியிலிருந்து 154 கிலோ கேரள கஞ்சா சிறீலங்கா கடற்படையினரால் நேற்று (12) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் பொதி ஒன்று இருப்பதாக சிறீலங்கா கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்று மாலை குறித்த பொதியை கைப்பற்றி சோதனைக்குட்படுத்திய படையினர் அப் பொதியிலிருந்து 153.7 கிலோ கேரளகஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.