மின் கம்பத்தில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் அச்சுவேலி தெற்கு நெருப்பு மூட்டி பகுதியில் இடம்பெற்றது.
நாவற்குழியைச் சேர்ந்த சஜீபன் (வயது –20) என்ற இளைஞன் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ஆவரங்கால் வல்லை முதன்மைச் சாலையில் விபத்து இடம்பெற்றது. ஆவரங்கால் நோக்கி வந்த மோட்டார் சைக்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முதன்மைச்சாலையில் நடப்பட்டிருந்த மின்கம்பத்துடன் மோதியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் பயனித்த இளைஞருடைய முகம் சிதைவடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர் அங்கு நின்ற இளைஞர்களால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. விபத்துத் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.