குவைத்தில் இருந்து தமிழகம் திரும்பியவர் சிறீலங்கா விமானத்தில் மரணம் !

0
547

குவைதில்  இருந்து இந்தியா செல்லும் வழியில் இலங்கை வந்திருந்த ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
மூத்தன் முருகன் (52) என்ற இந்த நபர், குவைத்தில் பணிபுரிந்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர், விசாக் காலம் முடிவடைவதையடுத்து தமிழகம் செல்லவிருந்தார்.
குவைத்தில் இருந்து சிறீலங்கன் விமானத்தில் வந்தபோது  இவரது உயிர் பிரிந்தது , இன்று (10) காலை ஆறரை மணியளவில், கட்டுநாயக்கவில் தரையிறங்க முன்னரே இவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப் படுகிறது ..
இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here