யூதர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

0
221

pooraaddam2

யூதர்கள் அதிகமாக அழிக்கப்பட்ட இனம்.இப்பொழுது அழித்துக்கொண்டிருக்கும் இனம்.நாடற்று நாடோடிகளாக உலகத்தில் அனைவராலும் திரத்தப்பட்ட இனம் பல எழுச்சி வரலாறுகளையும் துயர் வரலாறுகளையும் தன்னகத்தே கொண்ட இனம்.உலகத்தின் அதிபுத்திசாலிகளாக அறியப்பட்ட இனம் இவர்களுக்கு அடுத்ததாக நாங்கள் எங்களை சொல்லிக்கொள்கிறோம்.

இந்த யூதர்களிடம் இருந்து தமிழர்களாகிய நாம் கற்க வேண்டிய பாடங்கள் பல.உண்மையில் யூத இனம் உலகத்திலேயே ஒற்றுமையில் முதல் இடத்தில் இருக்கும் இனம் என கொள்ளலாம்.யூதர்கள் உலகத்தால் அழித்து ஒடுக்கப்பட்ட காலத்திலும் சரி இஸ்ரேல் உருவான காலத்திலும் சரி யூதர்கள் தங்கள் ஒற்றுமையில் சிறிதும் சிதறிவிடவில்லை.ஏன் தற்காலத்திலும் அப்படித்தான் இருக்கிறார்கள்.இஸ்ரேல் என்றோரு தேசம் உருவாக போகின்றது எல்லோரும் வாருங்கள் எனும் அறிவிப்பு மிகவும் இரகசியமாக விடப்பட்ட அறிவிப்பு அப்பொழுது உலகத்தின் அனைத்து மூலையில் இருக்கும் யூதர்களும் தங்கள் சொத்து சுகம் அனைத்தையும் விட்டுவிட்டு. வந்தார்கள் வந்தவர்கள் இஸ்ரேல் நிச்சயமாக உருவாகுமா என்று கேட்கவில்லை.தங்களுக்கு இருக்க இடம் கிடைக்குமா என்று கேட்கவில்லை.உண்ண உணவு கிடைக்குமா என்று கேட்கவில்லை அப்படி ஒரு ஒற்றுமையுடன் இணைந்தார்கள்.உண்மையில் இப்படி ஒரு ஒற்றுமை எங்களிடம் இல்லை அப்படி ஒரு ஒற்றுமை ஏற்படுத்தப்படும் இடத்தில் மட்டுமே எங்களுக்கான விடுதலையும் சாத்தியமாகும் என்பது உண்மை.

மற்றையது யூதர்கள் அனுபவித்த ஒவ்வொரு அழிவின் போதும் யூதர்கள் தங்கள் இனத்தின் நிலைப்பை உறுதிசெய்ய கட்டி எழுப்பிய ஒரு இரும்புசுவர் அவர்களின் கலாச்சாரம் பண்பாடு மொழி என்பன தான் ஒரு காலத்தில் தங்கள் மொழி பண்பாடு என அனைத்தையும் அழித்த யூத இனம் புரிந்து கொண்டது தங்கள் இனத்தை காக்க இவைகளால் மட்டும்தான்முடியும் என்று அதன் பின் அவற்றை ஒரு புதைபொருள் போல் தோண்டி எடுத்தது உண்மை ஆனால் அதன் பின் அவர்கள் அவர்களின் பண்பாடு மொழி என்பவற்றை கடுமையாக பின் பற்றி வருவது உண்மை.இதற்கு உதாரணம் யூதர்கள் தங்களது மொழியை பேச்சு வழக்கு எழுத்து வழக்கு என்று கூட பிரிக்கவில்லை என்பதுதான்.இவை எங்களிடம் இருக்கிறதா இந்த தனித்துவம் எங்களிடம் இருக்கிறதா இல்லை நாங்களே எங்கள் மொழியை கலாச்சாரத்தை பண்பாட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம் நாடோடிகளாக செல்லும் இடத்தில் இருப்பவற்றையெல்லாம் பின் பற்றுகிறோம்.முதலில் தமிழும் தமிழர்களும் இருந்தால் தான் தமிழீழம் அதைவிடுத்து பிரான்ஸில் பிரஞ்சுக்காரர்களாகவும் ஜேர்மனியில் ஜேர்மனியர்களாகவும் பிரித்தானியாவில் பிரித்தானியர்களாகவும் கனடாவில் கனேடியர்களாகவும் இருந்தால் ஒரு காலமும் எங்களுக்கான நாட்டை எம்மால் பெறமுடியாது.

இவற்றுக்கு மேலாக யூதர்கள் எங்களிடம் இருந்து ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் ஒருகாலமும் அப்பாவிப்பொதுமக்களை தாக்கக்கூடாது என்கிற பண்பை எங்கள் தமிழீழ தேசிய தலைவரிடம் இருந்து யூதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
-ஈழத்தில் இருந்து சேவின் தோழன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here