சர்­வ­தேசத்தின் நீதி­ப­திகள் பங்­கேற்­பதில் தவ­றில்லை என்கிறார் திலக் மாரப்­பன!

0
281

இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர் பில் நடத்­தப்­ப­ட­வுள்ள விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் வழக்கை விசா­ரிப்­ப­வர்­க­ளாக பங்­கேற்க முடி­யாது. அதற்கு அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்லை. மாறாக இந்த பொறி­மு­றையில் வழக்­குகள் உரிய முறையில் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னவா? என்­ப­தனை சர்­வ­தேச நீதி­ப­திகள்  கண்­கா­ணித்து அறிக்கை சமர்ப்­பிக்க முடியும் என்று புதிய வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்தார்.
2015 ஆம் ஆண்டில் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையில் இலங்­கைக்கு பாதகம் ஏற்­ப­டுத்தும் எவ்­வி­த­மான பரிந்­து­ரை­களும் இல்லை. எனவே எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள கால அவ­கா­சத்தில் நாங்கள் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்போம் என்றும் புதிய வெ ளிவி­வ­கார அமைச்சர் குறிப்­பிட்டார்.
2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையை புதிய வெ ளிவி­வ­கார அமைச்சர் என்ற வகையில் நான் மீளாய்வு செய்­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அதனை நான் 2015 ஆம் ஆண்டே ஆய்வு செய்­து­விட்டேன். அது இலங்­கைக்கு பாத­க­மான முறையில் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.
புதிய வெ ளிவி­வ­கார அமைச்­ச­ராக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி திலக் மாரப்­பன நேற்று கொழும்பில் உள்ள வெ ளிவி­வ­கார அமைச்சில் தனது கட­மை­களை பொறுப்­பேற்ற பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.
நான்கு மத தலை­வர்­களின் ஆசிர்­வா­தத்­துடன் காலை சுப­நேரம் 10.05 மணிக்கு வெ ளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன தனது கட­மை­களை பொறுப்­பேற்றார். மிகவும் எளி­மை­யாக நடை­பெற்ற இந்த நிகழ்வில் வெ ளிவி­வ­கார அமைச்சின் புதிய செய­லாளர் பிரசாத் காரிய வசம் உள்­ளிட்ட சில உயர் அதி­கா­ரிகள் கலந்­து­கொண்­டனர்.
அமைச்சர் திலக் மாரப்­பன தொடர்ந்து கருத்து வெ ளியி­டு­கையில்
இன்று எனது வாழ்வில் மிகவும் விசே­ட­மான தின­மாக அமைந்­துள்­ளது. நான் எதிர்­பார்க்­காத வகையில் இந்த முக்­கிய பதவி எனக்கு கிடைத்­துள்­ளது. எனினும் இந்த பதவி எனக்கு கிடைத்­ததன் பின்­ன­ணியை நினைத்து நான் கவ­லை­ய­டை­கின்றேன். ஆனால் எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள இந்த பத­வியை மிகவும் பொறுப்­புடன் ஏற்­றுக்­கொள்­கின்றேன்.
வெளி­வி­வ­கார அமைச்சு என்­பது நாட்­டுக்­காக பார­து­ர­மான பொறுப்­பு­க­ளையும் கட­மை­க­ளையும் கொண்­டுள்ள அமைச்­சாகும். அது தொடர்பில் எனக்கு சிறந்த புரிந்­து­ணர்வு உள்­ளது. இந்த அமைச்­சுத்தான் எமது நாட்டின் புகழை சர்­வ­தே­சத்­துக்கு கொண்­டு­செல்­கின்­றது. எமது நாட்டின் உண்­மைத்­தன்­மையை வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­று­கின்ற நிறு­வ­னமே வெளி­வி­வ­கார அமைச்­சாகும். இதனை உரிய முறையில் செய்­யா­விடின் சர்­வ­தேசம் எம்மை நம்­பிக்­கை­யற்ற தன்­மை­யுடன் பார்ப்­ப­தற்கு முயற்­சிக்கும்.
காரணம் இலங்­கை­யா­னது மனித உரி­மை­களை மதிக்­கின்ற நாடாகும். மேலும் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்கள் இலங்­கைக்கு வந்து முத­லீடு செய்­வ­தற்­கான சூழலை உரு­வாக்­க­வேண்­டி­யது எமது பொறுப்­பாகும். முத­லீடு செய்­வ­தற்கு இலங்கை சிறந்த நாடு என்­ப­தனை வெளிக்­காட்­டு­வ­தற்­கான சூழலை நாங்கள் உரு­வாக்­க­வேண்டும். அதற்­கா­கத்தான் எமது நாட்டின் தூத­ர­கங்கள் உலகம் முழு­வ­திலும் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன. எனவே எமக்கு பாரிய பொறுப்பு உள்­ளது.
இவற்றை சரி­யாக செய்­தால்தான் எமது நாட்­டுக்கு வெளி­நாட்டு உத­வி­களை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிலை ஏற்­படும். வெளி­நாட்டு முத­லீ­டு­களை பெற முடியும். சுற்­றுலாப் பய­ணி­களை வர­வ­ழைக்க முடியும். அதற்கு இலங்கை தொடர்­பான சரி­யான பிம்­பத்தை சர்­வ­தே­சத்­துக்கு வழங்­க­வேண்டும். அந்த கட­மையை நாங்கள் உரிய முறையில் முன்­னெ­டுக்­க­வேண்டும்.
தற்­போது ஆசி­யுரை வழங்­கிய தீனி­யா­வல பாலித்த தேரர் முன்­வைத்த விட­யங்கள் தொடர்­பாக நான் கவனம் செலுத்­துவேன் என்­ப­துடன் அது தொடர்பில் விசா­ரணை ஒன்­றி­ணையும் முன்­னெ­டுப்பேன் என்­ப­தனை இங்கு அறி­விக்­கின்றேன். தவ­று­களை திருத்­திக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மேலும் மனித உரிமை விவ­கா­ரத்தை மிகவும் ஆழ­மான முறையில் கவ­னத்தில் எடுப்போம். எந்­த­வொரு நாட்­டுக்கும் அநீதி ஏற்­ப­டாத வகையில் சர்­வ­தேச உறவை பேணுவோம். நான் இங்கு குறு­கிய காலமே பத­வியில் இருப்பேன் என்று எண்­ணு­கின்றேன். ஆனால் அக்­கா­லப்­ப­கு­தியில் பொறுப்­பு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­ப­டுவேன் என்­ப­தனை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.
கேள்வி: யுத்தக் குற்றம் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக இலங்கை இன்னும் சர்­வ­தேச அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்­கின்­றது. அதனை எவ்­வாறு கையாள்­வீர்கள்?
பதில்; அதில் அச்­சு­றுத்தல் எதுவும் இல்லை. முன்னாள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் முன்னாள் பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி. சில்வா ஆகியோர் சர்­வ­தே­சத்­துக்கு சில விட­யங்­களை உணர்த்­தி­யுள்­ளனர். அதா­வது இலங்­கை­யா­னது பொறுப்­பற்ற நாடு அல்ல என்­ப­தனை வெளிக்­காட்­டி­யுள்ளோம். எனவே மனித உரிமை விட­யங்­களை ஆழ­மான விவா­க­ர­மாக பார்க்­கின்றோம். மனித உரிமை விவ­காரம் சரி­யான முறையில் ஆரா­யப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை நாங்கள் உணர்ந்­தி­ருக்­கின்றோம்.
இதனை சர்­வ­தேச நாடு­களை திருப்­தி­ப­டுத்­து­வ­தற்­காக நாம் செய்­ய­வேண்­டி­ய­தில்லை. மாறாக எமது நாட்டின் நல­னுக்­காக இதனை நாங்கள் செய்­ய­வேண்டும். சர்­வ­தேச அர­சாங்­கங்கள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இவற்றை எமக்கு நினை­வூட்­டி­வ­ரு­கின்­றன. அந்த தேவையை நாங்கள் உணர்ந்­தி­ருக்­கின்றோம். பௌத்த கலா­சாரம் என்ற வகை­யிலும் நாங்கள் மனித உரி­மை­களை மதிக்­கின்றோம். யாரையும் புன்­ப­டுத்தும் தேவை எமக்கு இல்லை. நாங்கள் சமா­தா­னத்தை விரும்பும் மக்கள். மனித உரிமை என்­பது கலா­சா­ரத்தில் ஒன்­றிப்­போன ஒரு விட­ய­மாகும். மனச்­சாட்­சி­யுடன் இந்த விட­யங்­களில் நாங்கள் நடந்­து­கொள்வோம்.
கேள்வி:  புதிய கொள்­கைகள் ஏதா­வது கொண்­டு­வ­ரு­வீர்­களா?
பதில்: எனது தனிப்­பட்ட கொள்­கை­களை இங்கு கொண்­டு­வர முடி­யாது. எமது அர­சாங்­கத்தின் கொள்­கை­களை நாங்கள் முன்­னெ­டுத்து செல்வோம். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் கொள்­கை­களை நான் அமுல்­ப­டுத்­துவேன். நாங்கள் தேசிய அர­சாங்­கத்­தையே நடத்­து­கின்றோம். அதில் இரண்டு பிர­தான கட்­சிகள் இடம்­பெ­று­கின்­றன. எனவே கூட்டுப் பொறுப்­புடன் நாங்கள் அர­சாங்­கத்தின் கொள்­கையை முன்­னெ­டுத்துச் செல்வோம். எனது தனிப்­பட்ட கொள்­கை­களை இங்கு கொண்­டு­வர முடி­யாது.
கேள்வி: இலங்­கையில் சித்­தி­ர­வ­தைகள் இருப்­ப­தாக ஐக்­கிய நாடுகள் குற்றம் சாட்­டி­யுள்ள நிலையில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் ஒரு­வரை அச்­சு­றுத்­து­வ­தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. இது எவ்­வாறு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்?
பதில்:  அது எனக்கு தெரி­யாது. நானும் பத்­தி­ரி­கை­க­ளில்தான் அதனை பார்த்தேன். சில புகைப்­ப­டங்­களை பார்த்தேன். இது இவ்­வாறு நடந்­தது என்­ப­தனை எம்மால் ஊகிக்க முடி­யாது. அது விசா­ரிக்­கப்­ப­ட­வேண்டும். தற்­போது பொலிஸ் சேவை ஆணைக்­குழு உள்­ளது. அவர்கள் அதனை பார்த்­துக்­கொள்­வார்கள். அது எனது அமைச்­சுடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மல்ல. அதனை நான் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அது விசா­ரிக்­கப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். இத­னை­விட மிக முக்­கிய விட­யங்­களை நாங்கள் ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.
கேள்வி: அதனை பார­து­ர­மான விட­ய­மாக நீங்கள் பார்க்­க­வில்­லையா? சித்­தி­ர­வதை குற்­றச்­சாட்டு இலங்கை மீது சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில்?
பதில்: அதனை சித்­தி­ர­வ­தை­யாக நான் பார்க்­க­வில்லை. முதலில் இதனை கூற­வேண்டும். சித்­தி­ர­வதை என்­பது ஒரு­வரை பார­து­ர­மாக காயப்­ப­டுத்தும் விட­ய­மாகும். அதனை நான் அனு­ம­திக்க வில்லை. ஆனால் இந்த சம்­ப­வத்தை சித்­தி­ர­வ­தை­யுடன் சமப்­ப­டுத்த முடி­யாது. இது­வொரு துர்ப்­பாக்­கிய நிகழ்­வாகும். அதற்கு தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.
கேள்வி: 2015 ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை முழு­மை­யாக மீளாய்வு செய்­ய­வேண்டும் என எண்­ணு­கின்­றீர்­களா? காரணம் சர்­வ­தேச நீதி­ப­திகள் இதில் பங்­கேற்­க­வேண்டும் என கூட்­ட­மைப்பின் சுமந்­திரன் எம்.பி. அமெ­ரிக்­காவில் கூறி­யி­ருந்தார். அதனை தேடிப்­பார்ப்­பீர்­களா? எமது அர­சி­ய­ல­மைப்பில் சர்­வ­தேச நீதி­ப­திகள் பங்­கேற்­ப­தற்கு இட­முள்­ளதா?
பதில்: எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பின்­படி எந்­த­வொரு வழக்­குக்கும் சர்­வ­தேச நீதி­ப­திகள் பங்­கேற்க முடி­யாது. அதனை சரி­யாக உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். அதனை சர்­வ­தே­சத்­துக்கும் நாங்கள் கூறி­விட்டோம். அவர்­களும் அதனை ஏற்­றுக்­கொண்­டு­விட்­டார்கள். சர்­வ­தேசம் எந்த இடத்­திலும் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ள­டங்­கிய வழக்கு விசா­ரணை செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்று கூற­வில்லை. எந்த சந்­தர்ப்­பத்­திலும் சர்­வ­தேசம் இதனை கூறி­ய­தாக தெரி­ய­வில்லை.
ஆனால் இந்த செயற்­பாட்டில் வழக்கு விசா­ர­ணை­யா­னது சரி­யான முறையில் இடம்­பெ­று­கின்­றதா என்­பதில் திருப்­தி­ய­டை­வ­தற்­காக அந்த வழக்கு விசா­ரிக்­கப்­ப­டும்­போது சர்­வ­தேச நீதி­பதிள் பார்­வை­யா­ளர்­க­ளாக பங்­கேற்­க­வேண்டும் என்­பதே சர்­வ­தே­சத்தின் கோரிக்­கை­யாக உள்­ளது. அவ்­வா­றான செயற்­பா­டுகள் இலங்­கையில் இதற்கு முன்னர் பல தட­வைகள் இடம்­பெற்­றுள்­ளன.
உதா­ர­ணத்­துக்கு ஒரு விட­யத்தை கூறு­கின்றேன். ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ஜயலத் ஜய­வர்த்­த­ன­வுக்கு எதி­ராக 1995 ஆம் ஆண்டு அர­சாங்­கத்­தினால் வழக்கு ஒன்று தொடர்ப்­பட்­டி­ருந்­தது. அவர் வைத்­தி­ய­ராக செயற்­ப­டாமல் சம்­பளம் பெற்­ற­தாக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. நான் அந்த வழக்கில் அவ­ருக்­காக சட்­டத்­த­ர­ணி­யாக செயற்­பட்­டி­ருந்தேன். அப்­போது ஜயலத் ஜய­வர்த்­தன ஜெனி­வா­வுக்கு சென்று முறை­யிட்­டி­ருந்தார்.
அவரின் முறைப்­பாட்­டுக்கு அமைய ஜெனிவா மனித உரிமை ஆணைக்­குழு சர்­வ­தேச நீதி­பதி ஒரு­வரை நிய­மித்­தது. அதா­வது அவர் தொடர்­பான வழக்கு உரிய முறையில் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றதா? என்­ப­தனை கண்­கா­ணிப்­ப­தற்­காக அந்த சர்­வ­தேச நீதி­பதி நிய­மிக்­கப்­பட்டார். இந்­தி­யாவின் முன்னாள் நீதி­பதி ஒரு­வரே இவ்­வாறு இலங்கை வந்­தி­ருந்தார். அதனை யாரும் எதிர்க்­க­வில்லை. அப்­போ­தைய அர­சாங்­கமும் அதனை எதிர்க்­க­வில்லை. அவர் வந்து நீதி­மன்­றத்தில் அமர்ந்து வழக்கை கண்­கா­ணித்தார். அவ்­வாறு ஒன்றை செய்­வதில் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது.
கேள்வி: நீங்கள் அந்த ஜெனிவா பிரே­ர­ணையை ( 30.1) மீண்டும் மீளாய்வு செய்­ய­வேண்டும் என்று எண்­ணு­கின்­றீர்­களா?
பதில்:   நான் அதனை முழு­மை­யாக ஆய்வு செய்­து­விட்டேன். அந்த பிரே­ர­ணையில் எவ்­வா­றான விட­யங்கள் உள்­ளன என்று எனக்குத் தெரியும். நான் 2015 ஆம் ஆண்டு அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்­த­போ­துதான் அந்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அதில் பாரிய பயங்­க­ர­மான விட­யங்கள் இருப்­ப­தாக எனக்கு தெரி­ய­வில்லை. அதில் உள்ள விட­யங்­களை நாங்கள் மிகவும் இல­கு­வாக அமுல்­ப­டுத்த முடியும். மேலும் இந்த பிரே­ர­ணைக்கு நாங்கள் ஆத­ரவு அளித்­ததன் மூலம் சிறந்த நட­வ­டிக்கை ஒன்று எடுக்­கப்­பட்­டது. அதன்­மூலம் எமது நாட்­டுக்கு சாத­கத்­தன்மை ஏற்­பட்­டது. நாங்கள் அச்­ச­ம­டைந்­தி­ருந்த வகையில் எந்­த­வொரு விட­யமும் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையில் இல்லை.
அந்த பிரே­ர­ணையில் உள்ள விட­யங்­களை அமுல்­ப­டுத்த எமக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. நாங்கள் மேல­திக அவ­கா­சத்­தையும் கேட்­டுள்ளோம். தற்­போது சர்­வ­தேச எம்மை புரிந்­து­கொண்­டுள்­ளது. அதா­வது நாங்கள் இவற்றை முன்­னெ­டுக்க அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்றோம் என்­ப­தனை சர்­வ­தேசம் உணர்ந்­து­கொண்­டுள்­ளது. அத­னால்தான் எமக்கு உரிய தனித்­து­வத்­துடன் இந்த பொறி­மு­றையை தயா­ரிக்க எமக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
கேள்வி: நீங்கள் மேல­திக காலத்தை கேட்­டுள்­ளீர்­களா?
பதில்:  எமக்கு மேல­திக கால நேரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் சம்­பந்­தப்­பட்ட தரப்­புடன் நாங்கள் தொடர்­பு­கொண்­டுள்ளோம். எனவே பிரே­ர­ணையில் உள்ள விட­யங்­களை நாங்கள் அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்போம் என்­ப­தனை சர்­வ­தேச நாடுகள் உணர்ந்து அதனை ஏற்­றுக்­கொண்­டுள்­ளன.
கேள்வி: மேல­திக காலம் தேவை என்று கரு­து­கின்­றீர்­களா?
பதில்:  எமக்கு கால அட்­ட­வணை வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த கால அட்­ட­வ­ணையை நாங்கள் பின்­பற்­று­கின்றோம். ஆனால் குறு­கிய காலத்தில் இவற்றை முன்­னெ­டுக்க முடி­யாது. இவை மிகவும் பார­து­ர­மான விட­யங்கள். நல்­லி­ணக்கம் நட்­ட­ஈடு என்­ப­வற்றை முன்­னெ­டுக்க காலம் தேவை­யாகும். இவ்­வா­றான பிரச்­சி­னைகள் உள்ள பொஸ்­னியா சூடான் போன்ற நாடு­களில் 20 வரு­டங்கள் கடந்தும் இன்னும் இந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
கேள்வி: இந்த பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்த முடியும் என்று அர­சாங்கம் எண்­ணு­கின்­றதா?
பதில்; நிச்­ச­ய­மாக முடியும். அவை நாட்டை பாதிக்கும் வகையில் இல்லை.
கேள்வி: எனினும் அர­சாங்கம் இன்னும் நீதித்­துறை பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வில்­லையே?
பதில்: அந்த நீதித்­துறை பொறி­மு­றையை நாமே முன்­னெ­டுக்­க­வேண்டும். அது எமது பொறுப்­பாகும். நாம் அதனை முன்­னெ­டுத்து சர்­வ­தே­சத்­துக்கு கூற­வேண்டும். தற்­போ­தைய நிலை­மையில் சர்­வ­தே­சத்­துக்கு நாம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்றோம் என்­ப­தனை காட்­டி­யுள்ளோம். அதுதான் தற்­போ­தைய தேவை­யா­க­வுள்­ளது. அதனை நாம் செய்துள்ளோம். எமது பக்கத்தில் எதிர்பார்ப்பு உள்ளது. மனித உரிமை விடயங்களை முன்னேற்றுவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேசத்துக்கு காட்டவேண்டும். அதனை நாங்கள் செய்துள்ளோம்.
கேள்வி: வேறு நாடுகளுக்கு 20 வருட காலம் வழங்கப்படுகின்றது. ஆனால் இலங்கை குறுகிய காலத்தில் செய்யவேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றதா?
பதில் :அப்படியில்லை. அவ்வாறு எங்களுக்கு எவ்விதமான அழுத்தமும் இல்லை. நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோமா இல்லையா என்பதை பார்ப்பதே சர்வதேசத்தின் தேவையாகவுள்ளது. தற்போது இலங்கையின் நிலைமையை பாருங்கள். ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. யாரும் அரசாங்கத்தை பற்றி எழுதலாம். கடத்தல்கள் அச்சுறுத்தல்கள் இல்லை. கருத்து சுதந்திரம் உள்ளது. நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது.
அமைச்சர்கள் நீதித்துறையினால் எவ்வாறு கேள்விஎழுப்பப்படுகின்றனர் என்பதனை நீங்கள் காண்கிறீர்கள். எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இவை இடம்பெறுகின்றன. அதனால் அன்று இருந்த நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையிலான வித்தியாசத்தை சர்வதேச சமூகம் பார்க்கலாம். நாங்கள் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்று அவர்கள் உணர்கின்றார்கள். அதுதான் எமக்கு தற்போது தேவையாக உள்ளது.
எனவே மனித உரிமை விவகாரங்களில் நாங்கள் அக்கறையுடன் இருக்கின்றோம். அதனை சரியான வழியில் நாங்கள் கையாள்கின்றோம். அதனை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல முடியுமாயின் அது மிகப்பெரிய அம்சமாக இருக்கும்.

(ரொபட் அன்­டனி) (நன்றி :வீரகேசரி 19.08.2017)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here