சாவகச்சேரியில் சாரத்தில் தவறி வீழ்ந்து ஒருவர் பலி !

0
593

சாவகச்சேரிப் பகுதியில் வீட்டுக்கு மேற்கூரை (லெவல் சீற்) போட்டுக்கொண்டிருந்த ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் மானிப்பாய் கூழாவடியைச் சேர்ந்த கந்தையா நாகராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி டச்சு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு சாரத்தில் நின்றவாறு குறித்த நபர் மேற்கூரையைப் போட்டுள்ளார்
இதன்போதே சாரத்தி்லிருந்து இவர் தவறி விழுந்துள்ளார்.
கழுத்து முறிபட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here