யாழ்.ஆனைக்கோட்டையில் உந்துருளி விபத்தில் இளம் யுவதி பலி!

0
443

யாழ். ஆனைக்கோட்டையில் உந்துருளி துவிச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இளம் யுவதி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஆனந்தவீதி மானிப்பாயைச் சேர்ந்த கமலகுகராசா சாலினி (வயது 22) என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உந்துருளியில் தனது சகோதரனுடன் குறித்த யுவதி பயணம் செய்துள்ளார். காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தை ஆனைக்கோட்டை 3 ஆம் கட்டைப் பகுதியில் உந்துருளி முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த துவிச்சக்கரவண்டியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது யுவதி உந்துருளியில் இருந்து தூக்கி வீசப்பட்டு எலும்புகள் உடைந்து படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உந்துருளியை செலுத்திச்சென்ற யுவதியின் சகோதரன் கமலகுகராசா அனுசன் (வயது 20) யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வீடுதிரும்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here