கிழக்கு பல்கலை கால வரையறையின்றி பூட்டு!

0
133

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒரு சாராரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை பலகலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிழக்கு பல்கலையின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் ஆகிய ஏனைய அனைத்து வளாகங்களும் இவ்வாறு தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், நாளை (18) 12.00 மணிக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து விடுதி மாணவர்களும் தமது விடுதிகளின் திறப்புகளை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பலகலைக்கழக நிர்வாகம் மேலும் அறிவித்துள்ளது.
மாணவர்களின் விடுதி வசதி, வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீள சேர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இம்மாணவர்கள் கட்டிட முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த போராட்ட கலை கலாச்சார பீட மாணவர்கள் எவ்வித ஆதரவும் இல்லை கலை கலாச்சார பீடத்திற்கான கல்வி நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here