பிரான்சு லாக்கூர்நொவ் பகுதியில் அமைந்துள்ள சிறி சித்திவிநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (13.08.2017) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த தேர்த் திருவிழா முதல்முறையாக வீதியுலா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்த்திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
பிரெஞ்சு காவல்துறையினர் பாதுகாப்புவழங்கியதுடன், தொண்டர்களும் தமது பணிகளைச் செய்தமை சிறப்பாக இருந்தது.
பொதுமக்களுக்கு குடிநீர், குளிர்பானங்கள், உணவு என்பன தாராளமாக வழங்கப்பட்டது.
பொதுமக்கள் காவடிகள் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேரத்திக்கடன்களை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(எரிமலைக்காக படங்கள் : யூட்)