ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது:மத்திய அரசு

0
277

ராஜீவ் கொலை வழக்கின் குற்­ற­வாளிகள் றொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்­குமார் ஆகி­யோரை விடுவிக்க முடி­யாது என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக் கில் முருகன், சாந்தன், பேர­றி­வாளன், றொபர்ட் பயஸ், ஜெயக்­குமார் உள்­ளிட்ட 7 பேர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­றனர். 25 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சிறையில் உள்­ள­வர்­களை விடு­தலை செய்ய வேண்டும் என தமி­ழக அர­சியல் கட்சித் தலை­வர்கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.
இந்­நி­லையில் ஜெயக்­குமார், றொபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்­களை விடு­விக்­கக்­கோரி சென்னை உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­தனர். இந்த மனு, கடந்த ஜன­வரி மாதம் விசா­ர­ணைக்கு வந்­த­போது, தற்­போ­தைய நிலை­கு­றித்து மத்­திய, மாநில அர­சுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.
இந்­நி­லையில் இது­தொ­டர்­பான வழக்கு நேற்று மீண்டும் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜெயக்­குமார், றொபர்ட் பயஸை விடு­விக்க முடி­யாது என மத்­திய உள்­துறை அமைச்­சகம் பதில் மனுத்­தாக்கல் செய்­தது. ஆயுள் தண்­டனை என்­பதே வாழ்நாள் முழு­வதும் சிறையில் கழிக்க வேண்டும் என்­ப­துதான். எனவே ஜெயக்­குமார் மற்றும் றொபர்ட் பயஸ் ஆகியோர் வாழ்நாள் முழு­வதும் சிறையில் இருக்க வேண்­டி­யது தான் என்றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இத­னி­டையே பேர­றி­வாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here