செஞ்சோலை மழலைகள் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
192

செஞ்சோலை மழலைகள் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா வான் படையினர் நடாத்திய திட்டமிட்ட குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் உடல்சிதறிப் பலியானதுடன், 129 பேர் காயமடைந்திருந்தனர்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
மேற்படி படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலைகளின் ஆத்மசாத்திக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
திகதி: 14-08-2017 திங்கட்கிழமை
நேரம்: பி.ப 3.30 மணி
இடம்:
வள்ளிபுனம் – இடைக்கட்டு வீதி,
புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு
(தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி)
நன்றி
செல்வாசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அலுவலக தொடர்புகளுக்கு:
0773024316,
0212212530,
0776688710

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here