யாழில் அமெரிக்க துணைத் தூதுவர் முதலமைச்சருடன் சந்திப்பு!

0
127

 

யாழிற்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் றொபேர்ட் கில்ரன், வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்றையதினம் அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையா டினார்.

வடக்கின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகவும், அபிவிருத்திகள் தொடர்பாகவும், மற்றும் இலங்கை அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பின் பின்னர், வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தையும் அமெரிக்கத் துணைத்தூதுவர் சென்று பார்வையிட்டிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here