அசாம் வெள்ளத்தில் இதுவரை 59 பேர் உயிரிழப்பு!

0
190

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 59 பேர் மரணமடைந்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக 12 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில இடர் முகாமைத்துவ குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் வெள்ள பாதிப்பின் காரணமாக தேசிய விலங்கியல் பூங்கா ஒன்றில் 70 விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் மொத்தமாக 66,516 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here