இன விடுதலைக்காய் தன்னுயிர் ஈந்த ஈகத்தாய் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு நினைவு நாள் இன்று !

0
867


1987 ஆம் ஆண்டு யூ லை மாதம் 29 ஆம் திக­தி­யன்று இலங்கை -இந்­திய ஒப்­பந்­தம் மேற்­கொள் ­ளப்­பட்­ட­தை­ய­டுத்து, இந்­திய அமை­தி­காக்­கும் படை­யி­னர் அடுத்த வந்த நாள்களில் இலங் கைக்கு வந்து தங்­கள் பணி­களை ஆரம்­பித்­தி­ருந்­த­னர். சமா­தா­னத்­துக்­கான அமை­திப்­ப­டை­யில் சீக்­கி­யர்­கள், குஜ­ராத்­தி­யர், கேர­ளத்­த­வர், தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் எனப் பல மாநி­லத்­த­வர் ­க ­ளும் அடங்­கி­யி­ருந்­த­னர்.
வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் இந்­திய அமை­திப்­ப­டை­யி­னர் நிலை­கொண்­ட­ போது தமிழ்­மக் ­க­ளில் பெரும்­பா­லா­னோர் மகிழ்ச்­சி­ய­டைந்­த­னர். இந்­திய அமை­திப்­ப­டை­யி­னர் தமிழ்ப்­பி­ர­தே சங்­க­ளில் நிறுத்­தப்­பட்­டி­ ருந்­த­த­னால் தமது பாது­காப்­புக் குறித்­துக் தமிழ் மக்­க­ளுக்கு ஓர­ளவு ஆறு ­த­லா­க­வு­மி­ருந்­தது.
கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள அம்­பாறை மட்­டக்­க­ளப்பு திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளில் பூர்­வீ­க ­மாக வாழ்ந்து வந்த தமிழ் மக்­கள், அப்­போ­தைய ஐக்­கி­ய­தே­சி­யக் கட்சி ஆட்­சி­யின்­போது சிறீலங்காப் படை­யி­ன­ரால் நூற்­றுக்­க­ணக் கில் படு­கொலை செய்­யப்­பட்­டும், பல தமிழ்க் கிரா மங்­கள் அழிக்­கப்­பட்­டும் கொண்­டி­ருந்­தன.
கிழக்கு மாகா­ணத்­தில் வாழ்ந்த தமி­ழர்­கள் நிம்­ம­தி­யி­ழந்து மரண அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யில் வாழ வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­னர். பல பாரம்­ப­ரிய தமிழ்க்­கி­ரா­மங்­க­ளி­லி­ருந்து தமிழ் மக்­கள் இலங்­கைப் படை­யி­ன­ரால் அடித்­துத் துரத்­தப்­பட்­ட­னர். கிழக்கு மாகாணத்­தி­லி­ருந்து அக­தி­க­ளாக ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் வெளி­யே­றி­னர்.
இதன் கார­ண­மாக அந்தவேளையில், தமிழ் மக்­க­ளின் பாது­காப்்பு கேள்­விக் குறி­யா­கி­யது. இந்­தி­யப்­ப­டை­கள் தமிழ் மக்­க­ளின் காவ­லர்­க­ளாக வந்­த­தை­ய­டுத்து, அக­தி­க­ளாக வெளி­யே­றிய கிழக்கு மாகா­ணத் தமிழ் மக்­கள் இந்­திய அமை­ திப்­ப­டை­களை நம்பி மீண்­டும் தமது சொந்த இடங்­க­ளுக்­குத் திரும்­பி­யி­ருந்­த­ னர். ஆனால் தமி­ழர்க­ளின் நிம்­மதி நீடிக்­க­வில்லை. இந்­திய அமை­திப்­ப­டை­யி ­னர் அதனை விரும்­பி­யி­ருக்­க­வு­மில்லை.
தியா­க­தீ­பம் திலீ­பன் ஐந்து அம்­சக் கோரிக்­கைகளை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் நல்­லூர் கந்­த­சு­வாமி ஆலய வீதி­யில் சாகும்­வரை உணவு ஒறுப்­பில் ஈடு­பட்டு உயிர் துறந்­த­தைத் தொடர்ந்து இந் ­தி­யப்­ப­டை­யி­ன­ருக்­கும் தமி­ழீழ விடு­ த­லைப்­பு­லி­க­ளுக்கு மிடை­யில் முறு­கல் நிலை அதி­க­ரித்­துக் காணப்­பட்­டது. தமிழ் மக்­க­ளின் அச்­ச­மும் பல­ம­டங்­கா­கி­யது.
1987 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருக்­கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு மிடையே மோதல் ஆரம்­ப­மா­கி­யது. அமை­தியை நிலை­நாட்ட வந்த இந்­தி­யப்­ப­டை­யி­னர் தங்­க ­ளது அரா­ஜக நட­வ­டிக்­கை­க­ளைக் கட்­ட­விழ்த்து விட்­ட­னர்.
இரண்டு தரப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்­க­ளில் அப்­பா­வித் தமி­ழர்­கள் பலர் படு­கொ­லை­செய்­யப்­பட்­ட­னர். கார­ணமே இல்­லா­மல் தமி­ழர்­க­ளின் உயிர்­கள் இந்­தி­யப் படை­யி­ன­ரால் பறிக்­கப்­பட்­டன. பெண்­கள் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப் ­பட்­ட­னர். அந்­தக் கால கட்­டத்­தில் சுமார் இரண்­டா­யி­ரதிற்கு மேற்பட்ட தமிழ் மக்­கள் வரை­யில் இந்­தி­யப்­ப­டை ­யி­ன­ரால் கொல்­லப்­பட்­ட­னர் ..
விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருக்­கும் 1987, 1988ஆம் ஆண்­டுக்­கா­லத்­தில் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த இரண்­டா­வது ஈழப் போரின்போது, இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக உரத்­துக் குரல் கொடுப்­ப­தற்­கும் தொடர்ச்­சி­யான அறப்­போ­ராட்­டங்­களை நடத்­து­வ­தற்­கும் மட்­டக்­க­ளப்பு அம்­பாறை மாவட்ட அன்­னை ­யர் முன்­னணி முடிவு செய்­தி­ருந்­தது.
இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ரின் அட்­டூ­ழி­யங்­கள் கட்­டுக்­க­டங்­கா­மல் போகவே, பல பெண்­கள் அற­வ­ழி­யில் போரா­டு­வ­தற்­கான முடிவை எடுத்­தி­ருந்­த­னர். இந்­தி­யப்­ப­டை­யி­னர் தமிழ் மக்­கள் மீது தொடுத்த போரை நிறுத்­து­மாறு கோரி, உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அன்­னை­யர் முன்­னணி ஆயத்­த­மான வேளை­யில், 1988 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் பத்­தாம் திகதி அன்­னை­யர் முன்­ன­ணி­யி­ன­ரை அழைத்து இந்­திய அமை­திப்­படை உயர் அதி­கா­ரி­கள் பேச் ­சு­க்களை மேற்­கொண்­ட­போ­தி­லும் அதில் இணக்­கப்­பா­டெ­து­வும் எட்­டப்­ப­ட­வில்லை.
அன்றைய பேச்சுக்களால் எந்­த­வி­த­மான பய­னும் ஏற்­ப­டா­மல் போகவே, சாகும்­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தைக் கடைப்­பி­டிப்­பது என்ற முடிவை அன்­னை­யர் முன்­னணி எடுத்­த போது இந்­தப் போராட்­டத்­தில் யார் பங்­கேற்­பது? என்ற தெரிவை குலுக்­கல் முறை மூலம் மேற்்­கொண்ட போது உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் பங்கு கொள்ள அன­னம்­மா­ டே­விட் என்ற பெண்ணே தெரிவு செய்­யப்­பட்­டார்.
சாகும் வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மட்­டக்­க­ளப்பு அமிர்தகழி ­மாமாங்­கப்­பிள்­ளை­யார் ஆலய முன்­ற­லில் 1988 பெப்ரவரி 14 ஆம் திகதி டேவிட் அன்­னம்மா என்ற அந்­தப்­பெண்­மணி ஆரம்­பித்­த­போது, இந்­தி­யப்­ப­டை­யி­னர் அவ­ரைத் தொடர்ந்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொள்ள விடாது கடத்­திச் சென்­ற­னர்.
டேவிட் அன்­னம்­மா­வி­னால் தனது போராட்­டத்­தைத் தொடர முடி­ய­ வில்லை. சாகும்­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை நடத்­து­வ­தற்கு அன்­னை­யர் முன்­ன­ணிக்­குப் பல நெருக்­க­டி களை இந்­தி­யப் படை­யி­னர் கொடுத்­துக் கொண்­டி­ருந்­த­னர்.
டேவிட் அன்­னம்மா கடத்­தப்­பட்­ட­வு­டன் மற்­றொரு அன்­னை­யான பூபதி தனது உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை 1988 மார்ச் 19ஆம் திக­தி­யன்று உறு­தி­யான மனத்­தி­டத்­து­டன் ஆரம்­பித்­தார். போராட்­டத்­தில்­அ­வர் குதிப்­ப­தற்கு முன்­னர் முன் எச்­ச­ரிக்­கை­யாக, ‘‘சுயவிருப்­போடு உணவு ஒறுப்­பில் ஈடு­ப­டு­கி­றேன்.
எனக்கு சுய­நி­னை­வி­ழக்­கும் பட்­சத்­தில் எனது கண­வனோ, பிள்­ளை­களோ என்னை வைத்­தி­ய­சா ­லை­யில் சேர்க்­கக் கூடாது’’ என்று கடி­த­மெ­ழுதிக் கையெ­ழுத்­திட்­ட­தோடு, இந்­தி­யப் படை­யி­னர் உட­ன­டி­யாக எந்­த­வித நிபந்­த­னை­யுமின்றி சண்­டையை நிறுத்­த­ வேண்­டும். புலி­க­ளு­டன் பேச்சுக்களை நடத்­தித் தீர்வு காண­வேண்­டும். என்ற இரண்டு கோரிக்­கையை முன்­வைத்து தனது உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை தொடங்­கி­னார்.
1988 ஆம் ஆண்­டுக்கு முன்­னர் அன்னை பூபதி தனது இரண்டு பிள்­ளை­களை இலங்­கைப்­ப­டை­யி­னர் சுட்­டுக் கொன்ற தாக்­கத்­தி­லி­ருந்து மீள முடி­யாத நிலை­யில் தவித்­துக் கொண்­டி­ருந்­த­வர். தமி­ழி­னத்­தின் உரி­மை­க­ளுக்­காக தன்­னால் முடிந்த பணி­யா­கக் கரு­தியே உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் குதித்­தார்.
1988 மார்ச் மாதம் 19ஆம் திக­தி­யன்று அவர் ஆரம்­பித்­தி­ருந்த உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை இந்­திய அரசு கண்­டு­கொள்­ள­வே­யில்லை. அன்னை பூப­தி­யும் தனது உறு­தி­யான நிலைப்­பாட்­டி ­லி­ருந்து வில­கா­தி­ருந்­தார். அன்னை பூபதி நீர் மட்­டுமே அருந்தி உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தைத் தொடர்ந்து மேற்­கொண்­டி­ருந்­தார்.
ஏப்­ரல்­மா­தம் 19 ஆம் திகதி காலைப் பொழுது விடி­கின்­றது. என்­று­மில்­லா­த­வாறு மட்­டக்­க­ளப்பு அமிர்­த­கழி மாமாங்­கப் பிள்­ளை­யார் கோயில் பகுதி ஒரு வித சோகம் சூழ்ந்து பர­ப­ரப்­பா­கின்­றது. மக்­க­ளும் நேரம் செல்­லச் செல்ல அன்­னை­பூ­ப­தி­யின் போராட்ட மேடை­யைச ் சுற்றி கவலையுடன் குழுமி நிற்­கின்­ற­னர். அன்னை பூப­தி­யின் உடல் நிலை குறித்­த­தான சோகம் கிரா­மம் முழு­வ­தும் வெகுவேகமாகப் பர­வி­யது.
தாம் வரித்த கொள்கையினின்றும் பின்­வாங்­காத அன்னை பூபதி அன்றைய தினமே அதாவது 1988 ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 19ஆம் திக­தி­யன்று தனது உயி­ரைத்­து­றந்து மீளாத்­து­யி­லில் ஆழ்ந்­தார் .
தியா­கத்­தின் உரு­வ­மான அன்­னை­பூ­பதி தமி­ழி­னத்­துக்­காக உழைத்து உயிர்­நீத்து இன்று 31 ஆண்­டு­க­ளா­கி­விட்­டன.
ஒரு பெண்­ணாக, தாயாக, ஓர் இல்­லத்­த­ரி­சி­யாக மட்­டு­மன்றி, இவற்­றை­யெல்­லாம் கடந்து தனது தேசத்­தின் விடு­த­லைக்­காக தன் வாழ்க்­கை­யையே அர்ப்­ப­ணித்த ஓர் தியாக வர­லாற்­றின் பதி­வா­கிய அன்னை பூபதி, தமி­ழர் க­ளின் நெஞ்­சங்­க­ளில் என்­றும் நிறை­வாக நிலைத்து நிற்­பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here