களுத்துறை சிறைச்சாலை பேருந்தின் மீது துப்பாக்கி சூடு எழுவர் மரணம்

0
160

களுத்துறை வடக்கு சிறைச்சாலை பேருந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 கைதிகளும் ஒரு சிறைச்சாலை அதிகாரியும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை (27) இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் படுகாயமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் “சமயங்” எனப்படும் அனுர உதயஷாந்தவும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவராக செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஆறு சந்தேகநபர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிப் காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்களை களுத்துறை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக, காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here