சமையல் எரிவாயு கசிந்ததில் வீடொன்று முற்றாக தீக்கிரை!

0
324
சமையல் எரிதிரவ வாயு அடுப்பிலிருந்து எரிதிரவம் (GAS) கசிந்து வெளியேறியமையினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு ஒன்று தீக்கிரையானது.இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிரான்பற்று பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது
வீட்டில் அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வேளை ஏதோ பொருளொன்று எரிந்த மணம் அங்கு பரவியுள்ளது. இதையடுத்து சுதாகரித்த வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியவேளை வீடு திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இதன்போது வீட்டினுள் இருந்த 80 ஆயிரம் ரூபா பணம், பிள்ளைகளது பாடசாலைப் புத்தகங்கள், வாகனத்தின் அத்தாட்சிப்பத்திரம் உட்பட பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளன.
தீ விபத்துகுறித்து அறிவிக்கப்பட்டதையடுத்து யாழ் மாநகரசபை யின் தீயணைப்பு பிரிவினர் அவ் விடத்திற்கு வருகை தந்து தீயினை வேறுபகுதிகளுக்கு பரவாது கட்டுப்படுத்தியிருந்தனர்.
இருப்பினும் தீவிபத்தில் சிக்கிய வீட்டிலிருந்த அனைத்து உடமைகளும் எரிந்து தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத்தகது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here