வவுனியா பகுதியில் டிப்பர் வாகன விபத்தில் சாரதி பரிதாப மரணம்!

0
206
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வாகன ஆசனப்பட்டி அணியாது வேகமாக டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி ஒருவர் வீதி வேக தடுப்பில் பயணித்த வேளை வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முருங்கன் பகுதியில் இருந்து பூனாவ பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் வவுனியா, செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் வேகமாக பயணித்த போது வீதியில் போடப்பட்டிருந்த வேகத்தடையில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் டிப்பர் வாகனம் வேகத்தடையை குறிபாய்ந்த போது சாரதி டிப் பர் வாகனத்தில் முன் கண்ணாடி வழியாக தூக்கி வீசப்பட்டு தரையில் மோதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
வாகனத்தை செலுத்திய சாரதி ஆசனபட்டி அணியவில்லை. இதன் காரணமாகவே அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் முருங்கனைச் சேர்ந்த பிலிப்பு ஜேசுராஜா (வயது 55) என்பவரே மணமடைந்தவாராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here