ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : தமிழகத்தில் பரபரப்பு!

0
178

cy2t5cpusaacd6tசென்னை அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பலோ வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சுகயீன செய்தியை அறிந்த ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அப்பலோ வைத்தியசாலை வளாகத்தில் கூடியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜெயலலிதாவின் உடநிலை சீராக வேண்டும் என கோரி ஆயிரம் கணக்கான பெண்கள் நடு வீதியிலும் வைத்தியசாலை வளாகத்திலும் கதறி அழுது வானத்தை மன்றாட்டம் செய்தனர்.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here